நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்

நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ரோஜா
நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்  நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில்  போட்டியிடும் நடிகை ரோஜா  வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த 2014ம் ஆண்டு முதல் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ரோஜா பதவி வகித்து வருகிறார். அதே தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுகிறார். இதனையடுத்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற ரோஜா, வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளகளிடம் பேசிய அவர்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்