பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி - பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர் பிரதமர் மோடி - முதலமைச்சர் பழனிசாமி
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் - முதலமைச்சர்
* திமுக ஆட்சியில் இருந்து போது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை - முதலமைச்சர்
பாதுகாப்பான இந்தியாவாக திகழ, பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மோடியின் தொடர் பயணத்தால், உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார். சாமானிய மக்களுக்கு அளிக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியை, தேர்தலுக்கானது என கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தடுக்கப்பார்ப்பதாகவும், முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
Next Story