திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு

ஒரே இலக்கு ஆட்சி மாற்றம்; அதுவே மக்கள் விருப்பம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு
x
தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த ஆட்சியை விரட்டி நல்லாட்சி அமைப்போம் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நமது ஒரே இலக்கு ஆட்சி மாற்றம்; அதுவே மக்கள் விருப்பம், என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். வருகிற ஜனவரி 8 முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை ஊராட்சி சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என, திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..பாஜக மற்றும் அதிமுக அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றும், திமுக தலைமை கழகம் தரும் துண்டறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்