தெலங்கானா - ராஜஸ்தான் தேர்தல் பிரசாரம் ஓய்வு...

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓயந்தது.
தெலங்கானா - ராஜஸ்தான் தேர்தல் பிரசாரம் ஓய்வு...
x
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று  மாலை 5 மணியுடன் ஓயந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றார். இதேபோல, தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும், இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தெலங்கானாவில், 119 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 7 ம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறும். இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்