பச்சை மிளகாய்க்கும், காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பச்சை மிளகாய்க்கும், காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
பச்சை மிளகாய்க்கும், காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை தேர்தல் வருகிற 7 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தீராத அதிகாரப் பேராசையால், தவறுகளால் நாடு ஏராளமான விலை கொடுத்துள்ளதாக புகார் தெரிவித்தார். இந்தியா பிரிக்கப்பட்ட போது ஏராளமான தவறுகளை காங்கிரஸ் கட்சி செய்ததால், கர்தார்பூரை பாகிஸ்தானிடம் இழந்ததாக குற்றஞ்சாட்டினார். 
காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் பாஜக ஆட்சியால் சரி செய்யப்பட்டு வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்