காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரேவந்த் ரெட்டி நள்ளிரவில் கைது...

தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்ததே காரணம் என தகவல்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரேவந்த் ரெட்டி நள்ளிரவில் கைது...
x
தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை போலீசார் நள்ளிரவில் கைது செய்ததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக கோடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் ஈடுபட கூடாது என கோரி, ரேவந்த் ரெட்டி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால், ரேவந்த் ரெட்டி வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். தீவிரவாதியை கைது செய்வது போல், ரேவந்த் ரெட்டியை கைது செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்