"காங். மாநிலத்தலைவா் பதவி நிரந்தரம் கிடையாது" - இளங்கோவன்
"5 மாநில தேர்தலுக்காகவே பெட்ரோலியம் விலை குறைப்பு" - இளங்கோவன்
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் மாநிலத்தலைவா் இளங்கோவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அவர்,
5 மாநில தோ்தலை மனதில் கொண்டுதான் மத்திய அரசு பெட்ரோல்
விலையை சற்று குறைத்துள்ளதாக கூறினார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவா் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது என்றும் எதிர்காலத்தில் அப்பதவியில் யார் இருக்கவேண்டும் என்று ராகுல் காந்தி முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story