பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு - முத்தரசன்

இந்தியா முழுவதும் முழு கடையடைப்பு, சாலை மறியல் அனைத்துக்கட்சி சார்பில் முத்தரசன் பேட்டி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு - முத்தரசன்
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு, சாலை மறியல் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் முற்றுகை போராட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்