நிர்வாகிகளுக்கு ரஜினி ரசிகர் மன்றம் புதிய கட்டுப்பாடு...
தினசரி பணிகளை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் இளவரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட இளைஞரணி, மகளிரணி அமைப்புகள், மாவட்ட செயலாளர்கள் ,பொருளாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், தினசரி பணி தொடர்பான தகவல்களை அறிக்கையாக மாவட்ட பொருளாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story