கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம் - தேசிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னையில் இம்மாதம் 30-ஆம் தேதி நடக்கவுள்ள கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கருணாநிதி நினைவஞ்சலி கூட்டம்  - தேசிய தலைவர்கள் பங்கேற்பு
x
* சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30ஆம் தேதி 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் நடைபெறும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

* பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத்,  முன்னாள் பிரதமர் தேவகவுடா,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

* ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

* புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  தலைவர் கே.எம். காதர் மொய்தீன், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன்  ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

அமித்ஷா பங்கேற்க மாட்டார் - சுப்பிரமணியன் சுவாமி கருத்து



கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இந்த கருத்தை அவர் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்