"கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரணப்பொருள் " - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, தேமுதிக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு,
தேமுதிக சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 24 ம் தேதி முதல் இந்த பொருட்கள், கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார். கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ள விஜயகாந்த், கூடுதல் நிதியை அனுப்பி வைக்குமாறும், கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story