அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வு தனியாரிடம் ஒப்படைக்க முயலுவதா - மு.க. ஸ்டாலின்

அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வு தனியாரிடம் ஒப்படைக்க முயலுவதா - மு.க. ஸ்டாலின்
x
* அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

* அரசுபணியாளர் தேர்வாணயைம், ஏற்கனவே அதிமுகவின் தலைமை கழகமாக மாற்றப்பட்டு இருப்பதாக அவர் அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு, வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். 

* எனவே, அரசு பதவிகளுக்கான போட்டி தேர்வுகளை, தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று தமது அறிக்கையில், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்