ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணையில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு நபர் ஆணையம்  வெளியிட்ட அரசாணை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..
x
துத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அர்ஜுனன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் வெளியிட்ட அரசாணையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செல்வம், பஷீர் அஹமது அடங்கிய அமர்வு, ஒருநபர் ஆணையம் வெளியிட்டுள்ள அரசாணையில் விதிமுறைகள் 
மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது..

Next Story

மேலும் செய்திகள்