கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்

கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்
கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்
x
கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்திருப்பதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயலில் குமாரசாமி ஈடுபட்டுள்ளதாகவும், உறுப்பினர்களை கர்நாடகா அறிவித்திருந்தால் 20 நாட்களுக்கு முன்பே காவிரி ஆணையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கும் எனவும் ராமதாஸ், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

ஆணையத்தின் செயல்பாடுகளை  முடக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்