எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வர விரும்பவில்லை - திருச்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு...

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சிக்கு வந்தால், திமுக மீது மக்கள் வைத்துள்ள மரியாதை போய்விடும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வர விரும்பவில்லை - திருச்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு...
x
"எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வர விரும்பவில்லை"



திருச்சியில் திமுக சிறுபான்மையினர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் நேரு, மொய்தீன் கான் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கு திமுக உரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சிக்கு வந்தால், திமுக மீது மக்கள் வைத்துள்ள மரியாதை போய்விடும் என தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்