நொடிக்கு நொடி.... திக் திக்... மீட்புப் பணி எப்போது முடியும்..? வெளியான தகவல்

x

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார்.

உத்தரகாசியில் உள்ள சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தொழிலாளர்களை மீட்க நிபுணர்கள் இரவு பகலாக உழைத்து வருவதாகவும், பணியாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். மீட்புக்கு பிந்தைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனைகள் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் புஷ்கர் சிங் தாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்