"இந்து மத‌ம் எப்போது பிறந்த‌து?.. உருவாக்கியது யார்?" - கர்நாடக உள்துறை அமைச்சர் பேச்சு

x

இந்து மதம் என்பது எப்போது பிறந்தது? யார்தான் உருவாக்கியது? என்பது கேள்விக்குறியாக உள்ளது என கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியுள்ளார். ஜெயின், புத்த மதம் இந்தியாவில் உருவானதற்கான சான்றுகள் உள்ளதாகவும், இஸ்லாமிய மற்றும் கிறித்தவ மதங்கள் வெளியில் இருந்து வந்ததற்கான சான்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்து மதம் எப்போது உருவானது என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே இருந்து வருவதாக பரமேஸ்வரா கூறியுள்ளார். எந்த மதமாக இருந்தாலும் உயர்வு தாழ்வு இல்லை என்ற விஷயத்தை உணர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்