11 பேருக்கு செலுத்திய தடுப்பூசி.. உடல் நடுங்கி மயங்கி விழுந்ததால் பரபரப்பு - "3 குழந்தைகள்..." அதிர்ச்சியில் கேரளா மக்கள்

x

கேரள மாநிலம் கொல்லத்தில் அரசு மருத்துவமனையில் ஊசி போடப்பட்ட 11 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்திலுள்ள புனலூர் தாலுகா அரசு மருத்துவமனையில் கட்டண வார்ட்டில் உள்ள உள்நோயாளிகள் 11 பேருக்கு ஆண்டிபயாடிக் ஊசி போட்டப்பட்டது. பின்னர் 1 மணிநேரத்தில் 11 பேருக்கும் திடீரென நடுக்கம் மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக 8 பெரியவர்கள் அதே மருத்துவமனை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டனர். 5 வயதுக்குட்பட 3 குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால், திருவனந்தபுரம் எஸ்ஏடி மருத்துவமனையில் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துமனையில் ஆண்டிபயாடிக் மருந்துடன் கலக்கும் டிஸ்டில் வாட்டரில் பிரச்னையாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், விரிவான ஆய்வுக்குப் பின்னரே உறுதி செய்ய முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்