"திருப்பதி நடை அடைப்பு" - தேவஸ்தானம் தகவல்

x

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 3.15 மணி வரை கோயில் நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பரிகார பூஜைகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியின் அனைத்து இடங்களிலும் அன்னபிரசாதம் வழங்கும் சேவையும் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்