கார்த்திகை பிரம்மோற்சவம் - திருப்பதி பத்மாவதி தாயார் தங்க பெரிய சேஷ வாகன புறப்பாடு

x

திருப்பதி அருகே திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரமோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை தாயாரின் பெரிய சேஷ வாகன புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து புறப்பட்ட தாயார் வாகன மண்டபத்தை அடைந்து தங்க பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். தாயாரின் பெரிய சேஷ வாகன புறப்பாடு திருமாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்