திறக்கப்பட்ட திருப்பதி நடை.. அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் | Lunar Eclipse

x

சந்திர கிரகணத்தையொட்டி அடைக்கப்பட்ட ஏழுமலையான் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இன்று அதிகாலை 1 மணி 05 நிமிடங்களுக்கு தொடங்கிய சந்திர கிரகணம், 2 மணி 22 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனையொட்டி நேற்று இரவு அடைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை, கிரகணம் முடிந்ததும் இன்று அதிகாலை மணி 2 மணி 30 நிமிடங்களுக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் நடத்தப்பட்டன. காலை 5 மணி முதல் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்