மீண்டும் நாடாளுமன்றத்தில் அந்த 4 பேர்.. டெல்லி போலீஸின் அதிரடி திட்டம்

x

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது... இந்நிலையில், இந்த பாதுகாப்பு மீறலை எவ்வாறு நிகழ்த்தினார்கள் என்பது தொடர்பாக சம்பவத்தன்று நடைபெற்றது போல குற்றச் செயலை மீண்டும் காவல் துறையின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு நடத்திக் காட்ட விடுமுறை நாட்களான நாளை அல்லது நாளை மறுநாள் அவர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது... அதன்படி டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழுவால் கைது செய்யப்பட்டவர்கள் நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டு சம்பவத்தன்று நடைபெற்ற காட்சியை மீண்டும் உருவாக்கி விசாரணையைத் தொடர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்... இதைத் தவிர குற்றச் செயலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்கள் குரு கிராமில் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் தங்கி இருந்த அறைகளுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 15 நாட்களில் 50 கைப்பேசி எண்களுக்குப் பேசியுள்ளது தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்