"காவிரி பிரச்சனைக்கு ஒரே வழி இந்த திட்டம் தான்" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார்

x

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறியதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்...

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு டி.கே.சிவக்குமார் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், அனைத்து நதி நீர் பிரச்சனைகளும் 3 ஆண்டுகளில் நிறைவடைய வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. மத்திய அரசே கர்நாடகம்-தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உட்கார வைத்து பிரச்சினையை தீர்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி பிரச்சினை வராது எனக் கூறிய அவர், காவிரி நீர் திறக்க சாத்தியம் இல்லை என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் சொல்வதற்கு 2 நாள்களுக்கு முன்பு, தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கும்படி சட்ட நிபுணர்கள் ஆலோசனை அளித்ததாக அவர் கூறினார். மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் உண்மை நிலை குறித்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்