திருடனுக்கு நடந்த சோகம் - திருடப்போன இடத்தில் பறிப்போன உயிர்

x

திருடப்போன இடத்தில் கிணற்றுக்குள் விழுந்து திருடன் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சரியால் நகரில் நேற்று முன்தினம் இரவு திருடுவதற்காக சுவர் ஏறி குதித்து ஒருவன் வீட்டுக்குள் புகுந்தான். அப்போது தரை என நினைத்து கிணற்றுக்குள் அவன் தவறி விழுந்தான். நேற்று காலை உரிமையாளர் கிணற்றை எட்டிப்பர்த்தபோது ஒருவருடைய உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சுவர் ஏறி குதித்த திருடன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் அவர் யார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்