"பாஜக கூட்டணியில் சேர டெல்லிக்கே வந்து கெஞ்சினார்கள்" - PM மோடி பரபரப்பு பேச்சு | PM Modi

x

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி இணைய விரும்பியதாகவும், அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் தெலங்கானா கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Vovt

தெலங்கானாவில் வரும் டிசம்பர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிஜாமாபாத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தெலுங்கானாவின் வளர்ச்சிக்காக முதல்வர் சந்திரசேகர்ராவிடம் மத்திய பாஜக அரசு பெருமளவிலான நிதியை வழங்கியதாகவும், அதை பிஆஎஸ் கட்சி கொள்ளையடித்து விட்டதாகவும் பிரதமர் குற்றம் சாட்டினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல்வர் சந்திரசேகர் ராவ் தன்னை நாடியதாகவும், அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் கூறினார். தெலங்கானாவில் எதிர்க்கட்சியாக அமரவும் தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, தெலுங்கானா மாநில மக்களை ஒருபோதும் வஞ்சிக்க மாட்டோம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்