வங்கியில் ஒரு பைசா கூட இல்லை.. திருடன் எழுதிய அந்த லெட்டர்... மிரண்டு போன அதிகாரிகள்

x

கொள்ளை அடிக்கப்போன வங்கியில், ஒரு பைசா கூட கிடைக்காததால், கொள்ளையன் இந்த வங்கி நல்ல வங்கி என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் கிராம கூட்டுறவு வங்கியில், இரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் வங்கி லாக்கரை திறக்க முடியாததாலும், வங்கி முழுவதும் தேடி பார்த்தும், ஒரு பைசா கூட கிடைக்காததாலும் விரக்தி அடைந்ததாக தெரிகிறது. இதனால், கொள்ளையன் வங்கியை விட்டு செல்லும்போது இந்த வங்கி நல்ல வங்கி என்றும், தன்னை தேட வேண்டாம், தனது கைரேகை கூட கிடைக்காது என்றும் செய்தித்தாளில் என்றும் எழுதி வைத்து விட்டு சென்றது ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்