எலி படம் பாணியில் கொள்ளையடிக்க சென்ற திருடன்.. "நல்ல வங்கி" என எழுதி வைத்த சுவாரிசியம்..

x

கொள்ளை அடிக்கப்போன வங்கியில், ஒரு பைசா கூட கிடைக்காததால்,

கொள்ளையன் இந்த வங்கி நல்ல வங்கி என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

எலி படத்தில் வடிவேலு வங்கியில் கொள்ளை அடிக்கும் காட்சி...

வங்கி கொள்ளைகள் பரபரப்பான சம்பவங்களாக இருந்தாலும், இதுபோன்ற காமெடியான சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

அதில் ஒன்றுதான், மேட்ச்சல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம்...

மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் கிராம கூட்டுறவு வங்கியில், இரவு நேரத்தில் மர்ம நபர் திருடுவதற்காக புகுந்துள்ளார்.

உள்ளே சென்ற அவர் நீண்ட நேரமாக போராடியும் வங்கி லாக்கரை திறக்க முடியாததாலும், வங்கி முழுவதும் தேடி பார்த்தும், ஒரு பைசா கூட கிடைக்காததாலும் விரக்தி அடைந்ததாக தெரிகிறது.

இதனால், வங்கியை விட்டு வெறுங்கையுடன் புறப்பட்ட கொள்ளையன், இந்த வங்கி ரொம்ப நல்ல வங்கி என்றும், தன்னை தேட வேண்டாம், தனது கைரேகை கூட கிடைக்காது எனவும் செய்தித்தாள் ஒன்றில் எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறார்..

இந்த சம்பவம் மேட்ச்சல் பகுதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்