கேரளாவை நடுங்க வைத்த ராணுவ வீரர்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

x

கொல்லம், கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் ஷைன்குமார். ராணுவ வீரரான இவர், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது, ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக தன் நண்பரின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய ஷைன்குமாரை, மர்மகும்பல் கடத்தி சென்று தாக்கியதாகவும், முதுகில் PFI முத்திரை குத்தியதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராணுவ வீரரான ஷைன்குமார், தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தனது நண்பர் ஜோஷி என்பவரை வைத்து அரங்கேற்றிய நாடகம் என்பது தெரியவந்தது. உடனே, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்