"என்னது பிராங்க்கா..?" - முகமூடி அணிந்த பிராங்க் ஸ்டார்களை புரட்டி எடுத்த பொது மக்கள்

x

கேரளாவில் முகமூடி அணிந்து பிராங்க் என்ற பெயரில் இளம்பெண்களை தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை நகரத்தில் மிதுன் மற்றும் கண்ணன் ஆகிய இரு இளைஞர்கள், முகமூடி அணிந்து கொண்டு அவ்வழியாகச் சென்ற இளம் பெண்களை தொந்தரவு செய்தனர். சமூக வலை தளத்திற்காக பிராங்க் செய்வதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில், இதைக் கண்டு கொண்டிருந்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் பெண்களை தொந்தரவு செய்யும் சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக வழங்கிய நிலையில் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்