இந்தோனேஷிய பயணம் முடித்து டெல்லி வந்தவுடன் பிரதமர் போட்ட ட்வீட் | Indonesia | PM Modi

x

இந்தோனோஷியாவில் நடைபெற்ற இரு மாநாடுகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா திரும்பினார். ஆசியான் மற்றும் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நட்பு நாடுகளின் தலைவர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். இதில், விரிவான செயல்திட்டம் சார்ந்த நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் அதன் வருங்கால முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதுபற்றி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோகோ விடோடோ, இந்தோனேசிய அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் ஆகியோரின் வரவேற்புக்காக நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்