ரூ.2000க்கு வைத்த லாக்..ரிசர்வ் வங்கியை சுத்துப்போட்ட பொதுமக்கள்

x

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சண்டிகரில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர்... பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது... அதன்பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது... இந்நிலையில், சண்டிகரில் உள்ள செக்டார் 17ல் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வெளியே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற இங்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்