பசுக்களை விரட்ட ஆசிட் ஊற்றியதாக மூதாட்டி.. போலீசார் விசாரணை

x

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஜோசப் கிரேஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான காலி நிலத்தில் மேய்ந்த 18 பசுக்களின் மீது காயம் இருந்துள்ளதை கண்டு, பசுக்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக மூதாட்டியிடம் கேட்டபோது, தனது இடத்தில் மாடுகள் மேய்ந்தால் அவற்றை விரட்ட, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பசுக்களின் உரிமையாளர்கள் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், மூதாட்டியிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்