பிரதமர் மோடி தலைமையில்.. மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

x

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில், ஜி-20 அமைப்பின் இந்தியாவின் தலைமை நவம்பர் மாதத்துடன் நிறைவு பெற இருப்பதால், அதற்கு முன்பாக காணொலி கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொலி மூலம் வரும் 22ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக, ஜி-20 நாடுகளின் உறுப்பு நாடுகள், ஆப்ரிக்க யூனியனில் உள்ள ஒன்பது விருந்தினர் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்