‘மோமோஸ்’ வாங்கி வர மறந்த கணவன்... போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த மனைவி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

x

உத்தரப்பிரதேசத்தில், கணவர் மோமோஸ் கொண்டு வராததால், தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டு, போலீஸ் வரை சென்றது. ஆக்ராவில் ஒரு பெண், தனது கணவரிடம் சந்தையில் இருந்து மோமோஸ் கொண்டு வரச் சொன்னார். கணவர் மோமோஸ் கொண்டு வராததால், தம்பதியினருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவி போலீசாருக்கு போன் செய்து கணவன் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்கை குடும்ப ஆலோசனை மையத்திற்கு மாற்றினர். பின்னர் குடும்ப ஆலோசனை மைய அதிகாரிகள் அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். குடும்ப ஆலோசனை மையத்தில் நடந்த ஆலோசனைக்கு பின், கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்