நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. பைக்கை மறித்து கத்தி முனையில் வழிப்பறி - வெளியான சிசிடிவி-யால் பரபரப்பு

x

பெங்களூருவில் பட்டப்பகலில், இருசக்கர வாகன ஓட்டியிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜேசி நகர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, வாகன ஓட்டியிடமிருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்