கேட்டவுடன் கொடுத்த தலைமை ஆசிரியர் - ரூ.73 லட்சத்தை உருவிய கும்பல் - கர்நாடகாவில் அதிர்ச்சி

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் 2 வங்கிக் கணக்குகளில், ஓய்வூதிய பணம் சுமார் 73 லட்சம் ரூபாய் வந்துள்ளது. இதனிடைய வாட்ஸ்அப் செயலியில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தொடர்புகொண்ட சத்யம் பாண்டே மற்றும் மிட்டல் என இரண்டு நபர்கள், ஆன்லைன் லாட்டரியில் அவருக்கு பரிசு விழுந்துள்ளதாக நம்பவைத்து, அவரது வங்கிக் கணக்கை வாங்கியுள்ளனர். வங்கி கணக்கு விவரங்களை மர்மநபர்கள் வாங்கிய பின்னர், அந்த நபர்களிடம் இருந்து தலைமை ஆசிரியருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனிடையே, வழக்கம்போல வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றபோது, 2 வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்