சடை போடாமல் பள்ளிக்கு வந்த மாணவிகள்.... முடியை வெட்டி அவமானப்படுத்திய ஆசிரியை

x

காக்கிநாடா, சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகள் முறையாக தலை சீவி, ஜடை போட்டு வரவேண்டும் என்பது வழக்கம். இந்நிலையில் 8 மாணவிகள் இதை பின்பற்றாமல் தலையை விரித்து போட்ட நிலையில் வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை அவர்களின் முடியை, கத்திரிக்கோலால் கத்தரித்துள்ளார். இதனால், அவமானமாக உணர்ந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்