நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றதால் ஆசை மகளை கொன்று, உடலை பைக்கில் கட்டி இழுத்து சென்ற தந்தை

x

நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றதால் ஆசை மகளை கொன்று, உடலை பைக்கில் கட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற தந்தை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் நிஹாங் சீக். இவரது மகளான 16 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதில், மகளை தேடி அலைந்த நிஹாங் சீக், இரு தினங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த மகளிடம், எங்கே சென்றாய் ? என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முறையாக பதிலளிக்காத சிறுமியை நிஹாங் சீக் அடித்து கொலை செய்திருக்கிறார். பின்பு மகளின் சடலத்தை பைக்கின் பின்புறம் கட்டி கிராமத்தினுள் ஊர்வலமாக இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு தலைமறைவான நிஹாங் சீக்கை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்