அடாத மழையிலும் விடாத முதல்வர்.. அதிரடி ஆய்வால் பரபரத்த அதிகாரிகள்

x

புதுச்சேரியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்து, தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதுச்சேரியில் விட்டுவிட்டு கனமழை பெய்ததால், வெங்கட்டா நகர், சத்யா நகர், கிருஷ்ணா நகர், பூமியான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலை, கொக்கு பார்க், 45 சாலை ஆகிய பகுதிகளில், முதலமைச்சர் ரங்கசாமி, மழையில் குடை பிடித்தபடி ஆய்வு செய்தார். மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்