5 ஆண்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு | Manipur | Central Government

x

மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, பெரும் கலவரமாக மாறியது. 6 மாதங்களுக்கு மேலாகியும், தொடர்ந்து வன்முறை சம்ப‌வங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இந்திய இறையாண்மையை பின்பற்றவில்லை எனக்கூறி, 9 அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு தடை விதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மணிப்பூர் மக்கள் ராணுவம், மக்கள் விடுதலை ராணுவம், அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி உட்பட 9 அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்