விபத்தில் சிக்கி நொறுங்கிய கார்.. உயிர் தப்பிய மத்திய அமைச்சர்.. ம.பி.ல் பரபரப்பு

x

மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில், மத்திய அமைச்சர் பஹ்லாத் படேல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சிந்த்வாராவில் ஜன் சம்பர்க் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற மத்திய அமைச்சர் பஹ்லாத் படேலின் கார், சிந்த்வாரா-அமர்வாடா சாலையில் விபத்தில் சிக்கியது. காரின் ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் திறந்ததால், பஹ்லாத் படேல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்