ராணுவ வீரருக்கு நிகழ்ந்த கொடூரம்.. டேப்பால் கட்டி போட்டு உதைத்த கும்பல் -குலை நடுங்க வைத்த சம்பவம்

x

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷைன்குமார் என்ற ராணுவ வீரர் நேற்றிரவு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சனாபாறை சாலை அருகே உள்ள ரப்பர் தோட்டம் பகுதியில் வைத்து, அவரை 2 இளைஞர்கள் வழிமறித்து, உதவி கேட்பது போல் நடித்து ரப்பர் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றனர். அதன்பின், அவரை அடித்து, உதைத்து, கை, வாயை பேக்கிங் டேப்பால் கட்டிப்போட்டதோடு, அவரின் முதுகில், தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் பெயரை எழுதிவிட்டு தப்பிச் சென்றனர். இந்நிலையில், ராணுவ வீரர் எதற்காக தாக்கப்பட்டார், யார் தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்