ஞானவாபி மசூதியில் விஷ்ணு சிற்பம் - அகழாய்வுப் பணியில் திடீர் திருப்பம்

x

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் நடைபெற்ற அகழாய்வில், இந்து கடவுள்களின் சிற்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகழாய்வின்போது, விஷ்ணு மற்றும் அனுமன் சிற்பங்கள் கிடைத்ததாக, இந்திய தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், விஷ்ணு மற்றும் ஹனுமன் வழிபாட்டைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்