பீகாரில் கொடூர ரயில் விபத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரபரப்பு ட்விட்

x

பீகார் ரயில் விபத்தில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், உதவிகளுக்கு கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் பாதையை சீரமைக்கும் பணி தொடங்கும் எனவும் பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்