பூஜை போட்ட கையோடு 6 பேர் மீது அசுர வேகத்தில் மோதிய கார் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

பூஜை போட்ட கையோடு 6 பேர் மீது அசுர வேகத்தில் மோதிய கார் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
x

தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே, ரபீக் என்பவர் புதிய காருக்கு தர்காவில் பூஜை போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது கூட்டத்தில் பிரேக் போடுவதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு நடந்து சென்ற மக்கள் மற்றும் பல வாகனங்கள் மீது கார் வேகமாக மோதியதில், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ரபீக்கை உடனடியாக கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்