காதலனுக்காக திருநங்கையாக மாறிய டீச்சர்.. சர்ஜரி முடித்துவிட்டு திரும்பியதும் அதிர்ச்சி

x

ஆந்திராவில் ஓரினச்சேர்க்கை காதலனுக்காக, திருநங்கையாக ஆசிரியர் மாறிய நிலையில், காதலன் தலைமறைவானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விஜயவாடாவில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், 2019ஆம் ஆண்டு ஆலோகம் பவன், நாகேஸ்வரராவ் ஆகியோர் பி எட் படித்தனர். அப்போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு ஓரின சேர்க்கையாளர்களாக இருந்து வந்தனர். பின்னர், கிருஷ்ணலங்காவில் டியூசன் சென்டர் நடத்தி வந்தபோது, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்தனர். அதற்கு வசதியாக, பவனை டில்லிக்கு அழைத்து சென்ற நாகேஸ்வரராவ் அங்கு அவருக்கு திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை செய்து வைத்தார். அறுவை சிகிச்சை முடிந்த பின் பவன் தன்னுடைய பெயரை பிரம்மராம்பா என்று மாற்றி கொண்டு திருமண ஆசையுடன் ஊர் திரும்பினார். ஆனால் நாகேஸ்வர ராவ் திருமணத்திற்கு மறுத்து தலைமறைவாகிவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் பவன் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்