கவலையோடு கடிதம் எழுதிய சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி | supremecourt

x

விசாரணை நிறைவடைந்து பல மாதங்களாகியும் தீர்ப்பளிக்காமல் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார். இவ்வாறு தாமதமாக தீர்ப்பளிப்பது நீதித் துறையை பாதிக்கிறது எனவும் சந்திரசூட் தெரிவித்துள்ளார். பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, 3 மாதங்கள் கடந்தும் தீர்ப்புகள் அளிக்கப்படாத விவரமறிந்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதியபின் பல தீர்ப்புகள் அளிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்