திடீரென கவிழ்ந்த ஜீப் - 18 பேருக்கு நேர்ந்த கதி | Kerala

x

திடீரென கவிழ்ந்த ஜீப் - 18 பேருக்கு நேர்ந்த கதி

கேரள மாநிலம், இடுக்கிக்கு தோட்ட வேலைக்கு சென்ற தொழிலாளர்களின் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடுக்கு பகுதியில் உள்ள ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்ட வேலைக்கு, தமிழ் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப், குமுளி அருகே ஒரு சாலை வளையில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 18 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாள்களில் இது மூன்றாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்