மாணவி வாட்டர் பாட்டிலில் சிறுநீர், பேக்கில் காதல் கடிதம் - மாணவர்கள் செய்த அதிர்ச்சி சம்பவம்

x

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள், வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவியின் வாட்டர் பாட்டிலில், சிறுநீரை நிரப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பில்வரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள், வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். அதுமட்டும் இன்றி அந்த மாணவியின் பேக்கில் காதல் கடிதத்தையும் மாணவர்கள் சிலர் வைத்துள்ளனர். இந்த விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தால்,

கொதித்தெழுந்த கிராம மக்கள், கையில் கம்பு கட்டைகளை எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட மாணவரின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

தகவல் அறிந்து போலீசார் வந்த நிலையில்,

அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதி களேபரமானது. கையில் கம்புகளை வைத்துக் கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதும், போலீசார் அவர்களை கலைக்க முயற்சிப்பதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்