சிறுவனை விரட்டி கடித்த தெருநாய்கள் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி

x

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தெருநாய்கள் சிறுவனை சூழ்ந்து கடித்து குதறிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன. காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கப்பகுதியில் திடீரென 5 தெருநாய்கள், அந்த வழியாக சென்ற சிறுவனை சூழ்ந்து கொண்டன. தப்பியோட முயன்ற சிறுவனை விரட்டிச் சென்ற தெருநாய்கள், கடித்து குதறின. அப்போது, அந்த வழியாக வந்த டெலிவரி பாய் ஒருவர், நாய்களை விரட்டி, சிறுவனை காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்